திருச்சி சாலையில் விட்டு விட்டு எரியும் தெருவிளக்குகள் : வாகன ஓட்டிகள் அவதி

கோவை: மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகர் முழுவதும் சுமார் மூன்று லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இருளில் தவித்துவருகின்றனர்.

கோவை: மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகர் முழுவதும் சுமார் மூன்று லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இருளில் தவித்துவருகின்றனர்.

சுங்கம் சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை நோக்கிச் செல்லும் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள், விட்டு விட்டு டிஸ்கோ லைட் போல் எரிவதால் இரவு நேரங்களில் இப்பகுதியை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனால், இப்பகுதிகளில் வாகன விபத்துகளும், குற்றச் சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

திருச்சி சாலை மட்டுமின்றி அவினாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் பராமரிப்பின்றி நிற்கின்றன. 

ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளைப் பராமரிக்கும் பணிகளில் அந்தா நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை, மாநகராட்சி சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பொது மக்கள் புகார் அளிக்கின்றனர்.

பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், புதிதாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...