கோவையைச் சேர்ந்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னான் மகன் மணிகண்டன். இவர், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பேரூர் பைபாஸ் சாலையில் வசித்து வரும் பூபதி என்பவரை மீன் மார்க்கெட் அருகில் வைத்து இரும்பு கம்பியால் அடித்துள்ளார். பின்னர், இது தொடர்பாக பூபதி அளித்த புகாரின் பேரில், மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மணிகண்டன் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. ஆகவே, குற்ற நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, சிறையில் உள்ள மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Newsletter

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...