பழகுநர் உரிமம் வழங்க லஞ்சம்: வட்டார போக்குவரத்து அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூரில் பழகுநர் உரிமம் வழங்குவதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர்: திருப்பூரில் பழகுநர் உரிமம் வழங்குவதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்தான் அதிகப்படியான வாகன பதிவுகளும், ஒட்டுநர் மற்றும் பழகுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று காலை பழகுநர் மற்றும் ஒட்டுநர் உரிமம் பெற வந்தவர்களிடம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒட்டுநர் பயிற்சி பள்ளியின் மூலம் வந்தால் மட்டுமே உரிமங்கள் வழங்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் அறை முன்பு திரண்ட பொதுமக்கள், வட்டார போக்குவரத்து அலுவலர் ரஜினிகாந்த்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஒட்டுநர் பயிற்சி பள்ளியின் மூலம் வந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்ற விதிமுறைகள் எதுவும் இல்லை. பொதுமக்களிடம் நேரடியாக வழங்கப்படும் என்று போக்குவரத்து அலுவலர் உறுதியளித்ததின் பேரில், அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தின் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.



Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...