இது என்ன சினிமா போலீசா..? ரஜினியை கிண்டல் செய்த டி.டி.வி., தினகரன்

போலீஸ்காரர்கள் அனைவரும் உத்தமர்களாக இருக்க, இது என்ன சினிமாவா..? என தூத்துக்குடி விவகாரத்தில் போலீசாருக்கு ஆதரவாக பேசிய ரஜினியை, எம்.எல்.ஏ., டி.டி.வி., தினகரன் கிண்டலடித்துள்ளார்.

போலீஸ்காரர்கள் அனைவரும் உத்தமர்களாக இருக்க, இது என்ன சினிமாவா..? என தூத்துக்குடி விவகாரத்தில் போலீசாருக்கு ஆதரவாக பேசிய ரஜினியை, எம்.எல்.ஏ., டி.டி.வி., தினகரன் கிண்டலடித்துள்ளார். 

சென்னையில் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ., டி.டி.வி., தினகரன் கூறியதாவது:- ரஜினிகாந்த் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அவர் பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குரலாக ஒலிக்கிறார். தமிழக காவல்துறை எப்படிப்பட்ட அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது என்பது மக்களுக்கு தெரியும். குட்கா ஊழலுக்கு அவர்கள்தான் காரணம். அது ரஜினிக்கு தெரியாதா..? ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, குடிசைகளுக்கு, வாகனங்களுக்கு தீ வைத்தது போலீசார் என்பதை மறந்து விட்டு பேசுகிறார். இந்தக் குற்றச்சாட்டிற்கு போலீசார் தரப்பில் இருந்தே இன்னும் மறுப்பு வரவில்லை.

ஆனால், போலீசுக்கு ஆதரவாக ரஜினி பேசுகிறார். சினிமாவில் ஒரு நிலைப்பாடும், வெளியே ஒரு நிலைப்பாடும் அவர் எடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் வாயில் வந்ததெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார். அவருடைய தொகுதிக்கே போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் அவரால் செல்ல முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்டோம் என்று முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், சட்டப்பேரவையில் முறையாக தீர்மானம் நிறைவேற்றி அவசரச் சட்டம் பிறப்பிக்காவிட்டால், நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் ஆலையை திறக்க வாய்ப்பு உள்ளது.

முதலமைச்சர் என்ன செய்தோம் என்று சட்டப்பேரவையில் சொல்கிறாரே தவிர, என்ன செய்யப்போகிறோம் என்பதை அவர் சொல்லவில்லை. இன்னும் 2, 3 மாதங்களில் பாருங்கள், ஸ்டெர்லைட் பற்றிய உண்மை நிலவரம் தெரிய வரும், இவ்வாறு அவர் கூறினார்

Newsletter

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...