கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா: கோவையில் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.



தி.மு.க., தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி இன்று 95-வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, கோவை 55-வது வட்டம் சார்பில் பழையூரில் வட்ட செயலாளர் மா.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு கழக கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

இதேபோல், மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



காளப்பட்டியில் மாநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையாகவுண்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில் 95 பேர் கண் தானம் வழங்கினர். 

இதேபோல், ராம்நகரில் முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.



கோவை, தெலுங்குபாளையம் பிரிவில், மாநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தெலுங்குபாளையம் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. 

காந்திபுரம் அண்ணாசிலை அருகே, மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி 10 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். 

காரமடையில் புறநகர் வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அருண்குமார் கழக கொடியேற்றி வைத்து, 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...