கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: தமிழக கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அங்கிருந்த 36 கடைகள் எரிந்து சாம்பலாகின. ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலிருந்த கடையில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்கான காரணம் என்று கூறப்பட்டது. 



இது போன்ற விபத்துகள் வேறு எந்தக் கோயிலிலும் ஏற்படக்கூடாது என்று அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36,000 கடைகளை அகற்ற அரசு உத்தரவிட்டது. இந்து சமய அறநிலையத்துறை இதனை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. 

இதனையடுத்து, அறநிலையத்துறை சார்பில் தமிழக கோவில்களுக்கு அருகில் இருக்கும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. மாற்று இடம் வழங்காமல் கடைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்நிலையில், கடைகளை அகற்ற மேலும் கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களை உடனடியாக அப்புறப்படுத்துவது கடினம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வரும் ஜனவரி 1-ம் தேதிக்கு முன்னதாக கடைகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், கடை உரிமையாளர்கள் நான்கு வார காலத்திற்குள் விண்ணப்பித்தால் மாற்று இடம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...