பரதம் உள்ளிட்ட கலைப் போட்டிகளின் பிரிவுகளில் 'தமிழ்நாடு பொன்விழா ஆண்டு' கொண்டாட்டம்

கோவை: கோவை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைபோட்டிகள் பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடன பிரிவுகளில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.

கோவை: கோவை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைபோட்டிகள் பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடன பிரிவுகளில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.



இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழா ஆண்டாக இவ்வாண்டு தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் கலை, விளையாட்டு, கட்டுரை கவிதை, பேச்சு போட்டிகள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பாக கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியில், தமிழிசை பாட்டுப்போட்டி, பரதநாட்டியம் (பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்) நாட்டுப்புற நடனம் ஆகிய பிரிவுகளில் கோவையில் நடத்தப்பட உள்ளது. 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட உள்ளது.

இம்மூன்று பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அரசின் செலவில் அனுப்பப்படுவர். மாநில போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசு ரூ. 50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும் இம்மூன்று பரிசு பெறுபவர்களுக்கும் தங்கப்பதக்கம் 4 கிராமில் வழங்கப்படும். தமிழிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விவரங்களை மண்டல உதவி இயக்குநர், மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை (அரசு இசைக்கல்லூரி வளாகம்) செட்டிப்பாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம் பட்டி, கோயம்புத்தூர் - 641050 என்ற முகவரிக்கு வரும் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

போட்டி நடைபெறும் நாள் இடம் ஆகிய விவரங்களைப் போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் அலுவலகத்தை 0422-2610290 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...