சிறுவாணி சாலையில் மேலும் 9 மரங்கள் அகற்றும் முடிவு கைவிடல்

கோவை: சாலை விரிவாக்கப் பணிக்காக சிறுவாணி சாலையில் இருந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ஏற்கனவே பல மரங்கள் வெட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், மேலும் 9 மரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.


கோவை: சாலை விரிவாக்கப் பணிக்காக சிறுவாணி சாலையில் இருந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ஏற்கனவே பல மரங்கள் வெட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், மேலும் 9 மரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த வழியாக உள்ள 83 மரங்களை வெட்ட வருவாய்துறையினர் முடிவு செய்திருந்தனர். முன்னதாக, காளம்பாளையம் முதல் இருட்டுப்பள்ளம் வரையில் சாலை விரிவாக்கத்திற்காகப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்தனர். முதற்கட்டமாக 7 மீ. சாலையை 10 மீட்டராக அகலப்படுத்துகின்றனர். சாலைகளின் இருபுறமும் தலா 1.5 மீ விரிவாக்கம் செய்யப்படுகிறது. 



போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலை, அவிநாசி, திருச்சி, பொள்ளாச்சி, பாலக்காடு, சத்தி மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற முக்கிய சாலைகளையும் இணைப்பதில்லை. எனவே, மரங்களை வெட்டி, சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் 83 மரங்களை மட்டுமே அகற்ற முடிவு செய்தனர். 

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, மேலும் ஆய்வு நடத்திய நெடுஞ்சாலை அதிகாரிகள், மேலும் 39 மரங்களை வெட்டாமல், சாலையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வின் போது ஓசை அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 



இதையடுத்து, மேலும், 9 மரங்களை அகற்றாமல் சாலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த முடிவு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...