கோவையைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மாயம்

கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த  கணேசன், செல்வி ஆகியோரின் மகள் ஐஸ்வர்யா (15). இவர் ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்ற ஐஸ்வர்யா வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், ஐஸ்வர்யாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் செல்வபுரம் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

இதேபோல்,
கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவரது மகள் சபீதா (19). இவர் சி.எம்.எஸ். கல்லூரியில் முதலாமாண்டு ஆண்டு பி.காம். படித்து வந்தார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்று, வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை  ரமேஷ் பீளமேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...