சசிக்குமார் கொலைவழக்கில் சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணை ஆரம்பம்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு சிபிசிஜடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த 22ம் தேதியன்று இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்திதொடர்பாளர் சசிக்குமார், அவரது வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதனை அடுத்து கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு வன்முறைசம்பவங்கள் நடைபெற்றன. இந்த கொலைதொடர்பாக துடியலூர் காவல் துறையினர்வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். 

இதனிடையே திருச்சி சரக டிஜஜி அருண், கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ரம்யபாரதி உள்ளிட்டோர் தலைமையில் 8 தனிப்படைகள்அமைக்கப்பட்டு, மர்மநபர்களை தேடி வந்தனர். முன்பகை காரணமாக கொலை நடந்ததா அல்லது மதரீதியான பிரச்சணையில் கொலை நடந்ததா அல்லது வேறு எதேனும் காரணத்தினால் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைமேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற நாளான்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுஇருந்த கண்காணிப்பு கேமராக்களில்பதிவான காட்சிகள் மற்றும் சசிகுமாரின்கைப்பேசி அழைப்புகளை கொண்டும்விசாரணை நடத்தி வந்தனர். 

எனினும்தனிப்படை விசாரணையில் எந்த ஒருமுன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து, இந்தகொலை வழக்கை சிபிசிஜடிக்கு மாற்ற டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து சிபிசிஜடி ஏடிஜிபி கரண்சின்கா சென்னையில் இருந்து கோவை வந்தார். பின்னர் சம்பவம்நடைபெற்ற துடியலூர் பகுதிக்கு சென்ற அவர்கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வுமேற்கொண்டார். பின்னர் துடியலூர் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், வழக்குவிசாரணை குறித்த தகவல்களையும், வழக்கின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம்கேட்டறிந்தார். சிபிசிஐடி காவல் துறையினரின் விசாரணையில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணங்கள் குறித்த விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...