சசிக்குமார் கொலைவழக்கில் சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணை ஆரம்பம்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு சிபிசிஜடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த 22ம் தேதியன்று இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்திதொடர்பாளர் சசிக்குமார், அவரது வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதனை அடுத்து கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு வன்முறைசம்பவங்கள் நடைபெற்றன. இந்த கொலைதொடர்பாக துடியலூர் காவல் துறையினர்வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். 

இதனிடையே திருச்சி சரக டிஜஜி அருண், கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ரம்யபாரதி உள்ளிட்டோர் தலைமையில் 8 தனிப்படைகள்அமைக்கப்பட்டு, மர்மநபர்களை தேடி வந்தனர். முன்பகை காரணமாக கொலை நடந்ததா அல்லது மதரீதியான பிரச்சணையில் கொலை நடந்ததா அல்லது வேறு எதேனும் காரணத்தினால் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைமேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற நாளான்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுஇருந்த கண்காணிப்பு கேமராக்களில்பதிவான காட்சிகள் மற்றும் சசிகுமாரின்கைப்பேசி அழைப்புகளை கொண்டும்விசாரணை நடத்தி வந்தனர். 

எனினும்தனிப்படை விசாரணையில் எந்த ஒருமுன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து, இந்தகொலை வழக்கை சிபிசிஜடிக்கு மாற்ற டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து சிபிசிஜடி ஏடிஜிபி கரண்சின்கா சென்னையில் இருந்து கோவை வந்தார். பின்னர் சம்பவம்நடைபெற்ற துடியலூர் பகுதிக்கு சென்ற அவர்கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வுமேற்கொண்டார். பின்னர் துடியலூர் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், வழக்குவிசாரணை குறித்த தகவல்களையும், வழக்கின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம்கேட்டறிந்தார். சிபிசிஐடி காவல் துறையினரின் விசாரணையில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணங்கள் குறித்த விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...