காவிரியில் நீர் திறந்துவிடக் கோரி தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




காவிரியில் இருந்து தமிழக அரசுக்கு நீர் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்திற்கு நீர் திறந்து விடவில்லை. இதை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 




அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் நாகேந்திர குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 
காவிரியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்  500 டி.எம்.சி வரை நீர் பெற்ற தமிழகம், தற்போது 60 டி.எம்.சி வரை கூட பெற முடியவில்லை. காவிரியை நம்பி தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடக அரசு செயல்படுகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...