முதலமைச்சர் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்- அப்பல்லோ நிர்வாகம்

முதல்வர் உடல்நிலை குறித்து இன்று காலை 8 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை மூத்த செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு உடல் நலம் பெற மே‌லும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்படி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முதலமைச்சர் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்திகளைப் பரப்புவோர் கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் மீது கடும் ‌‌‌நட‌வடிக்கை எடுக்கப்படும் என்றும்‌ காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...