ஜெ. உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்பல்லோ மருத்துவமனை


சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று 11-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பீலே மேற்பார்வையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டு வரை பார்வையிட்டார். பின்னர் மருத்துவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இன்று தமிழக அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்றனர். இந்த நிலையில் இன்று இரவு அப்பல்லோ நிர்வாகம், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.



அதில் கூறப்படுள்ளதாவது

அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் Guy's and St. Thomas மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்ட சர்வதேச சிறப்பு மருத்துவரான டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் இருந்து அப்பல்லோ மருத்துவமனை ஆலோசனைகளைப் பெற்று வருகிறது.

டாக்டர் ரிச்சர்ட் பீலே முதல்வரின் உடல்நிலையை ஆராய்ந்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவரது மருத்துவ அறிக்கைகளையும் ரிச்சர்ட் பீலே ஆய்வு செய்தார்.

பின்னர் மருத்துவர்களுடன் ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறை குறித்து அவர் விவாதித்தார். ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்தொற்றை குணப்படுத்த இப்போது ஆண்ட்டிபயாட்டிக்குகளுடன் கூடிய சிகிச்சை முறையை தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...