ஈஷா யோகா மையத்தினரிடமிருந்து பாதுகாப்பு வேண்டி கிராமப்புற மக்கள் புகார்

கோவை, முள்ளாங்காடு பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள், ஈஷா யோகா மையத்தினரிடமிருந்து பாதுகாப்பு வேண்டி காவல் துறையினரிடம் இன்று புகார்  அளித்தனர்.

கோவை மாவட்டம், பேரூர் வட்டம் இக்கரை போளுவாம்பட்டி முள்ளாங்காடு பகுதியில் வன சாவடி எதிர்புறம் பல ஆண்டுகளாக வாழும் இருளர் வகுப்பினைச் சேர்ந்த பழங்குடியின மக்கள்  பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலங்களை தற்போது கடந்த ஒருவார காலமாக ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்த் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தை சேர்ந்த முகிலன், சுவாமி பசுவந்தா, சுவாமி சத்யா உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவன் தூண்டுதலின் பேரில் பல்வேறு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனவே எங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஈஷா யோகா மையத்தினர் பொறுப்பு. தங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளித்து அவர்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...