பெட்ரோல் விலை 14 காசுகள், டீசல் 10 காசுகள் உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

புதுடெல்லி: மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலவாணி மாற்று விகிதத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி கடைசியாக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. 

இந்நிலையில், விநியோகஸ்தர்கள் கமிஷன் அதிகரிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 14 காசுகள், டீசல் 10 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...