ஒரே நாளில் ரூ.1400 கோடிக்கு விற்பனை: பிலிப்கார்ட் சாதனை

புதுடில்லி: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட், பண்டிகை காலத்தை முன்னிட்டு "பிக் பில்லியன் டே" விற்பனையை அக்டோபர் 3ம் தேதி நடத்தியது. இதில் ஒரே நாளில் ரூ.1400 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிகமானவர்கள் ஆர்டர் செய்ததன் காரணமாக இந்த அளவிற்கு விற்பனை அதிகரித்ததாகவும், 2015ம் ஆண்டு 5 நாட்களில் ரூ.2000 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் பிலிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல புதிய வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கியதன் காரணமாக இந்த வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக பிலிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.

அதிக வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் புக் செய்தாலும் டிராபிக், லோடிங் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பிலிப்கார்ட் நிறுவனம் முன்னேற்பாடுகளை செய்திருந்தது. இதனால் எந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் எட்ட முடியாத விற்பனை சாதனையை பிலிப்கார்ட் நிகழ்த்தி உள்ளதாக அதன் தலைவர் அரவிந்த் சிங்கால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இனி வரும் காலங்களில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை கால சலுகை அறிவிக்கப்பட்ட பிறகு பிலிப்கார்ட்டில் 40 மில்லியன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு பண்டிகை கால விற்பனையில் 80 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களை விற்பனை செய்து 3 மடங்கு அதிகமாக விற்பனை சாதனையை அமேசான் நிறுவனம் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...