சீனாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை முயற்சி தொடக்கம்

பீஜிங்: இந்திய தொலைத்தொடர்புத்துறை 4ஜி எனப்படும் அதிவிரைவு சேவையை தற்போது வழங்கிவரும் நிலையில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறைக்கான தொலைத்தொடர்பு சேவையை தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது. அதற்கான முதற்கட்ட சோதனையில் சீனா இறங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சீனாவில் உள்ள சுமார் 130 கோடி மக்கள் கைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 30 சதவீதம் பேர் 4ஜி சேவை இணைப்புகளை பெற்றுள்ளனர். வினாடிக்கு ஒரு ஜிபி வேகத்தில் செயலாற்றும் இந்த 4ஜி இணைப்பைவிட அதிகவேகம் கொண்டது இந்த 5ஜி சேவை இது வினாடிக்கு 20 ஜபி வரை அதிவேகமாக இயங்கக்கூடியதுமான 5ஜி இணைப்பை தங்கள் நாட்டு மக்களுக்கு விரைவாக அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

கைபேசி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான தகவலைப்பெற விரும்பும்போது தற்போது 4ஜி இணைப்பின் மூலமாக பெற 10 மில்லிவினாடி நேரம் தேவைப்படுகிறது. ஆனால் இதே தகவலை 5ஜி இணைப்பின் வழியாக ஒரே மில்லிவினாடியில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உள்ள 100 முக்கிய பெருநகரங்களில் இந்த 5ஜி சேவையை தொடங்குவதற்கான சிக்னல் கோபுரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு பரிமாற்ற கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கும் சோதனைரீதியான முதல்கட்ட முயற்சியில் சீனா தற்போது களமிறங்கி உள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...