கர்நாடக அணைகளில் 2வது நாளாக ஆய்வு

பெங்களூரு : கர்நாடக அணைகளை காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு 2-வது நாளாக இன்று ஆய்வு செய்கிறது. ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாண்டியா மாவட்டம் சென்ற நிபுணர் குழுவினர், ஹம்ரஅல்லி மற்றும் தைலுரு ஏரிகளை ஆய்வு செய்தனர். ஆணைத்தொட்டி, ஆவேரிப்பள்ளி கிராமங்கள் மற்றும் மாலவல்லி தாலுக்காவில் காவிரி நீர் பாசனப்பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்நிலையில் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளை அந்த குழு இன்று ஆய்வு செய்கிறது. தொழில்நுட்ப குழுவினர் இன்று இரவு மேட்டூர் வருகின்றனர். மேட்டூர் அணை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளை அவர்கள் நாளை ஆய்வு செய்யலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப குழு, காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, நீர் திறப்பது மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றை நாளை ஆய்வு செய்ய உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி பாசனப்பகுதிகள் மற்றும் அணைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வளத்துறை ஆணையர் ஜி. எஸ். ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை வரும் 17-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட உள்ளது.  

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...