தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்தகுமார் உயிரிழப்பு

கோவை வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்கிற அச்சத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 22 ஆம்தேதி மர்மநபர்களாள் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் வன்முறை நடந்தது. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்தனர். 

இந்நிலையில், கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த இந்துமுன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் கடந்த மூன்றாம்தேதி திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினரும் பலத்த பாதுகாப்போடு ஆனந்தகுமார் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். அதற்குள்ளாக ஆனந்தகுமாரின் சகோதரர் ரஞ்சித்குமார் தனது தம்பியை சென்னைக்கு கொண்டு செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், காவல்துறையினர் மன உளைச்சளை ஏற்படுத்துவதாக கூறி அவரது சகோதரர் ரஞ்சித்குமார் வியாழனன்று அரசுமருத்துவமனை வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்று அதேமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார். இந்நிலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி மதியம் உயிரிழந்தார்.

முன்னதாக தற்கொலைக்கு முயன்றதாக போத்தனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டு கலவரம் செய்ததாக கோவை பந்தய சாலை காவல்நிலையத்தில் ஆனந்தகுமார் மீது இன்று வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் ஆனந்தகுமார் சிசிக்சை பலனின்றி இறந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...