சைக்கிள சும்மா நிறுத்தாதீங்க..! உடனே கால்பண்ணுங்க ரேடியோ சிட்டிக்கு...

பெரும்பாலான மக்கள் தங்களின் தேவைக்காக வாங்கப்பட்ட சைக்கிளை ஒருக்கட்டத்தில் பயன்படுத்த முடியாமல் வீட்டிலேயே வைத்து விடுவது வழக்கம். அவ்வாறாக தேக்கப்பட்ட சைக்கிள் நீண்ட நாட்களுக்குப்பின் பயன்படுத்தவே முடியாத நிலைமைக்கு வந்து விடுகின்றது.



இவ்வாறாக பயனற்று கிடக்கும் சைக்கிளை அதனை வாங்க முடியாமல் இருக்கும் மக்களுக்கு குடுத்து உதவும் வகையில் ரேடியோ சிட்டி வானொலி நிறுவனம் ஒரு திட்டதை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனற்று கிடக்கும் சைக்கிள் குறித்து அதன் உரிமையாளர் தெரியப்படுத்தினால் அவரின் வீட்டுக்கே சென்று அந்த சைக்கிளை கைப்பற்றி இல்லாதவர்க்கு கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தினை கடந்த மாதம் கோவை மாநகராட்சி மேயர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

பயனற்று உள்ள சைக்கிளை மீட்டு இல்லாதவர்களுக்கு குடுத்து உதவும் வகையில் ரேடியோ சிட்டி 91.1 வானொலி நிறுவனத்தின் சார்பில் ''ரீசைக்கிள்'' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் பயனற்றுள்ள சைக்கிள் குறித்து தெரியப்படுத்தினால் அவர்களின் வீட்டுக்கே சென்று அந்த சைக்கிளை கைப்பற்றி சீரமைக்கப்பட்டு பின் அதன் பயன்பாடு உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறாக கடந்த தினங்களில் கோவை உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.



மேலும் இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் பயனற்றுள்ள சைக்கிளை கொடுக்க +91 422 663 9911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.







Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...