தீவிபத்தில் புதுப்பெண் உட்பட இரு பெண்கள் பலி

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி வசந்தா (22). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி தனது வீட்டில் உள்ள மண்ணெண்னை அடுப்பை வசந்தா பற்ற வைக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக தீ அவர் மீது பரவியது. அவரின் கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தினர் வசந்தாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பலியானார். இது குறித்து வழக்கு பதிந்த போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மற்றொரு சம்பவம்

கோவை கண்ணப்ப நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி சுகந்தி (37). சம்பவத்தன்று சுகந்தி தனது வீட்டில் இருந்த மண்ணெண்னை அடுப்பை பற்றவைக்கும் போது, அவர் மீது  தீ பரவியது. தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...