கோவை அரசு பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம்


அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி கோவை இராமநாதபுரம் சுங்கம் அரசு போக்குவரத்து பணி மனையில் இருந்து பேருந்துகளை இயக்க மறுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

கோவை இராமநாதபுரம் சுங்கம் அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த 100 சி என்ற பேருந்து நேற்று காலை பீளமேடு சேரன்மாநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பேருந்து இடதுபுறமாக முந்திச்செல்ல முயன்ற போது பேருந்து ஓட்டுனருக்கும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஓட்டுனர் செல்வக்குமாரை சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஓட்டுனர் செல்வக்குமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சுங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்க மறுத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகளை இயக்க மறுத்த தொழிலாளர்கள் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.ஓட்டுனரை தாக்குயவர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் ஏராளமானோரை அழைத்து வந்து பீளமேடு போக்குவரத்து பணிமனையில் வைத்து மீண்டும் மீண்டும் தாக்கியதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர் .

இந்த போராட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.பணி மனை முன்பாக ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் ஓட்டுனர் செல்வக்குமாரை தாக்கிய திருமலைராஜன், சுப்பிரமணியம் என்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.இது குறித்த தகவலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் காவல் துறையினர் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.காலை 4 மணி முதல் 7.30 வரை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டம் காரணமாக சுங்கம் போக்குவரத்து பணிமனை முன்பாக பரபரப்பான சுழ்நிலை நிலவியது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...