கோவை அரசு பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம்


அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி கோவை இராமநாதபுரம் சுங்கம் அரசு போக்குவரத்து பணி மனையில் இருந்து பேருந்துகளை இயக்க மறுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

கோவை இராமநாதபுரம் சுங்கம் அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த 100 சி என்ற பேருந்து நேற்று காலை பீளமேடு சேரன்மாநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பேருந்து இடதுபுறமாக முந்திச்செல்ல முயன்ற போது பேருந்து ஓட்டுனருக்கும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஓட்டுனர் செல்வக்குமாரை சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஓட்டுனர் செல்வக்குமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சுங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்க மறுத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகளை இயக்க மறுத்த தொழிலாளர்கள் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.ஓட்டுனரை தாக்குயவர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் ஏராளமானோரை அழைத்து வந்து பீளமேடு போக்குவரத்து பணிமனையில் வைத்து மீண்டும் மீண்டும் தாக்கியதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர் .

இந்த போராட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.பணி மனை முன்பாக ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் ஓட்டுனர் செல்வக்குமாரை தாக்கிய திருமலைராஜன், சுப்பிரமணியம் என்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.இது குறித்த தகவலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் காவல் துறையினர் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.காலை 4 மணி முதல் 7.30 வரை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டம் காரணமாக சுங்கம் போக்குவரத்து பணிமனை முன்பாக பரபரப்பான சுழ்நிலை நிலவியது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...