அர்ஜுன் சம்பத் பூஜை செய்த துப்பாக்கி யாருடையது தெரியுமா ?

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத், ஆயுத பூஜை தினத்தன்று இரு துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுக்கு பூஜை செய்து, அந்தப் புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பதிவேற்றினார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் உள்ளனர். 

இந்நிலையில், காவல் துறை ஆணையர் அமல்ராஜ் இதுகுறித்து கூறுகையில், அர்ஜுன்சம்பத் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள அந்த துப்பாக்கி அவருடையது தானா? அப்படி அவருடையதென்றால் அதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினோம். அர்ஜுன் சம்பத்  வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக ஆயுதப்படை காவலர் ஒருவர் அவரது வீட்டின் அருகே காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். ஆயுத பூஜை தினத்தன்று அந்த போலீஸ்காரரின் துப்பாகியை வாங்கித்தான் அர்ஜுன்சம்பத் பூஜை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பாக வைக்க வேண்டிய துப்பாக்கியை, அடுத்தவரிடம் கொடுத்த அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...