கோவை துடியலூரில் கார், இருசக்கர வாகனம், தனியார் பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி – ஒருவர் படுகாயம்


கோவை துடியலூர் அருகே அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீதி மோதி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.



கோவை துடியலூரை அடுத்த வெள்ளக்கிணர் பிரிவு அருகே தனியார் நிறுவனத்தில் பணி முடிந்து கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது பின்னால் கோவை நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருந்த மாருதி சிப்ட் கார் மோதியது. இதில் இருசக்கரவாகனத்தில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இருசக்கர வாகனத்தின் மீதூ மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பினை தாண்டி எதிர் சாலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது நேருக்கு நேர் பயங்கமாக மோதியது. இதில் கார் பேருந்தின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொருங்கியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் இருந்த பொதுமக்கள் காரில் இருந்து மீட்டனர். 

இதில் சம்பவ இட்த்திலேயே காரில் பயணம் செய்த 3 பேரும்பலி மணிகண்டன் 22 - கவுண்டம்பாளையம், அஸ்கர் அலி 22 - சிவாநந்தாகாலனி, முகம்மது சாகிப் 22 - கவுண்டம்பாளையம் ஆகியோர் பரிதாபமாக பலியாயினர். மேலும் படுகாயமடைந்த  இருசக்கர வாகன ஓட்டி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து துடியலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருபுறம் பொதுமக்களில் பலபேர் மீட்ட்பு பணியில் ஈடுபட்டாலும் பெரும்பாலோனர் தங்களது செல்போன்களில் படம் எடுப்பதிலேயே மும்முறமாக இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...