துப்பாக்கி வைத்து ஆயுதபூஜை அர்ஜூன் சம்பத் மீது வழக்கு

துப்பாக்கி, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாடியாதை முகநூலில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உக்கடத்தில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கி ,கத்தி, அரிவாள்போன்ற ஆயுதங்கள் வைத்துகடந்த பத்தாம் தேதி ஆயுத பூஜைகொண்டாடினார். இதனை முகநூலிலும்வெளியிட்டார். சட்ட விரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்தது குறித்து சென்னை, கோவை போன்ற இடங்களில்பல்வேறு அமைப்பினர் காவல்துறையினரிடம்புகார் அளித்தனர்.

இது குறித்த விசாரணை மேற்கொண்ட கோவை சைபர் காவல்துறையினர் விசாரணையில் இத்தகவல் உறுதிப்படுத்திய சைபர் க்ரைம் காவல் உதவி ஆய்வாளர் அனுபல்லவியின் புகாரின் பேரில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து மத உணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டது 153 பிரிவின் கீழும், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்து மிரட்டுதல் 25(1)ஏ ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...