முதல்வர் குறித்து அவதூறு- நீதிமன்றக் காவலில் வங்கி ஊழியர்கள்



முதல்வர் குறித்து அவதூரான தகவல்களை பரப்பியதாக கோவையில் வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கோவை, தொண்டாமுத்தூர் ஐயன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (49) மற்றும் சுரேஷ் (58). தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் கனரா வங்கியில் ரமேஷ் எழுத்தாளராகவும், சுரேஷ் தங்க நகை மதிப்பீட்டாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதியன்று அதிமுக மகளிர் அணி உறுப்பினரும், உள்ளாட்சித் தேர்தலில் 9வது வார்டில் கவுன்சிலராக போட்டியிடும் புனிதா தேவி மேற்குறிப்பிட்ட வங்கியில் பணம் செலுத்த சென்றுள்ளார். அப்போது, ரமேஷ் மற்றும சுரேஷ் இருவரும் இணைந்து புனிதா தேவியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குறிய கருத்தினை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, வியாழனன்று புனிதா தேவி சில அதிமுக உறுப்பினர்களுடன் சென்று ஏன் முதல்வர் குறித்து அவ்வாறு பேசுகிறீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார். அப்போதும், இருவரும் முதல்வர் குறித்து அவதூரான கருத்தையே தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, புனிதா தேவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வங்கி ஊழியர்கள் ரமேஷ், சுரேஷ் ஆகியோரை வெள்ளியன்று (இன்று) கைது செய்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின் இந்த வழக்கு குறித்து விசாரித்த 6வது நடுவர் நீதிபதி ராஜவேலு, இருவரையும் 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும், இந்த வழக்கு குறித்தான விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.



Newsletter

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....