காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்- வித்யாசாகர் ராவ்

தஞ்சை: காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண தம்மால் இயன்றதை செய்வேன் என்று தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் உறுதி அளித்துள்ளார். மும்பையிலுள்ள மத்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு, தமிழ் பேரரசர் ராஜேந்திர சோழனின் உருவப்படத்தை அர்பணித்ததற்காக, தஞ்சையில் தமிழக ஆளுநர் பொறுப்பு வித்யாசாகர் ராவுக்கு சென்னை தமிழ்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இதில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாட்டில் காவேரி டெல்டா விவசாயிகளின் பிரச்சனை குறித்து தாம் நன்கு அறிவேன். காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் 30 நிமிடம் உரை நிகழ்த்தப்பட்டதை சுட்டிக்காட்டினார். 

விழாவில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தமிழ் பல்கலைகழ துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...