காமன்வெல்த் அமைப்பிலிருந்து மாலத்தீவு விலகல்

காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகுவதாக, மாலத்தீவு அறிவித்துள்ளது.

தெற்காசிய நாடான மாலத்தீவில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக, முகமது நஷீத் இருந்தார். 2012ல், முகமது நஷீத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அப்துல்லா யாமீன், அதிபராக பதவியேற்றார். 'நஷீத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது, ஜனநாயக படுகொலை' என, சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டின. மாலத்தீவில், மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு, மாலத்தீவு அரசுக்கு, காமன்வெல்த் அமைப்பு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முகமது நஷீத்தின் ஆட்சி நீக்கப்பட்டதிலிருந்தே, மாலத்தீவை, காமன்வெல்த் அமைப்பு அவமானப்படுத்தி வருகிறது. மாலத்தீவில் ஜனநாயகம் இல்லை என்பது போன்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறது. அதனால், காமன்வெல்த் அமைப்பில் தொடர்ந்து நீடிப்பது நல்லதல்ல என்பதால், அதிலிருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...