பள்ளி மாணவிகள் எழுதி, இசையமைத்த டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பாடல் குறுந்தகடு வெளியீடு

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்ற கோவை எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவிகளான, அபிநயா மற்றும் அவரது சகோதரி 8-ம் வகுப்பு பயிலும் கல்யாணி ஆகிய இருவரும் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான  பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலையும் பாடிய முதல் குறுந்தகடினை கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் வெளியிட்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் கொசு புகை வண்டி மூலம் புகையடித்தல், கொசு மருந்து தெளித்தல், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று மழைநீர் தேங்கிக்கிடக்கும் குப்பை கழிவுகளில் அகற்றுதல், பள்ளி, கல்லூரி மற்றும் நர்சிங் மாணவர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமும் டெங்கு தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை  எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளான 10-ம் வகுப்பு பயிலும் அபிநயா மற்றும் அவரது சகோதரி 8-ம் வகுப்பு பயிலும் கல்யாணி ஆகிய இருவரும் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான  பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலையும் பாடிய முதல் குறுந்தகடினை கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டார். மாநகராட்சி கல்வி அலுவலர் மூலம் மாநகராட்சி மற்றும் அனைத்து  பள்ளிகளுக்கும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகடுகளை வழங்கிட மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் அறிவுறுத்தினார். 

உடன் துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி  தாளாளர் செல்வராஜ்,  முதல்வர் கீதா கோபிநாத், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த செல்வகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...