'புட் பேங்க்' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு மூலம், ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டன



கோவையை சேர்ந்த 'புட் பேங்க்' தன்னார்வத் தொண்டு அமைப்பு, இன்று உலக உணவு நாளை கொண்டாடும் விதமாக, நலிந்தோருக்கும் ஆதரவற்றோருக்கும் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்தது.

அதன்படி, இன்று, அந்த அமைப்பைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கோவை வ.உ.சி. பூங்காவில் திரண்டு, மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.

இது குறித்து அந்த அமைப்பின் ஒரு ங்கிணைப்பாளர் வைஷ்ணவி கூறுகையில், 'எங்களது முக நூல் பக்கத்தில் 4800 பேர் எங்களை பின்  தொடர்கின்றனர். அவர்களை ஒன்று திரட்டி, மக்களுக்கு உணவு வழங்க முடிவெடுத்தோம். தொடர்ந்து இன்று ஏராளமானோர் அவர்கள் வீடுகளில் உணவு சமைத்தும், பிஸ்கட்டுகள், பழவகைகளையும்,  ஆதரவற்ற மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.



வ.உ.சி. பூங்கா தொடங்கி, ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, நஞ்சுண்டாபுரம், காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவுகள் விநியோகிக்கப்பட உள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இந்த உணவு நாளில், எங்கள் அமைப்பு முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.  இந்நிகழ்வில் பங்கேற்ற பொது மக்கள் பலர் ஆர்வத்துடன் தாங்கள் சமைத்த உணவுகளை வழங்கி, பசியுடன் இருப்பவர்களை மகிழ்வித்தனர்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...