'புட் பேங்க்' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு மூலம், ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டன



கோவையை சேர்ந்த 'புட் பேங்க்' தன்னார்வத் தொண்டு அமைப்பு, இன்று உலக உணவு நாளை கொண்டாடும் விதமாக, நலிந்தோருக்கும் ஆதரவற்றோருக்கும் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்தது.

அதன்படி, இன்று, அந்த அமைப்பைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கோவை வ.உ.சி. பூங்காவில் திரண்டு, மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.

இது குறித்து அந்த அமைப்பின் ஒரு ங்கிணைப்பாளர் வைஷ்ணவி கூறுகையில், 'எங்களது முக நூல் பக்கத்தில் 4800 பேர் எங்களை பின்  தொடர்கின்றனர். அவர்களை ஒன்று திரட்டி, மக்களுக்கு உணவு வழங்க முடிவெடுத்தோம். தொடர்ந்து இன்று ஏராளமானோர் அவர்கள் வீடுகளில் உணவு சமைத்தும், பிஸ்கட்டுகள், பழவகைகளையும்,  ஆதரவற்ற மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.



வ.உ.சி. பூங்கா தொடங்கி, ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, நஞ்சுண்டாபுரம், காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவுகள் விநியோகிக்கப்பட உள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இந்த உணவு நாளில், எங்கள் அமைப்பு முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.  இந்நிகழ்வில் பங்கேற்ற பொது மக்கள் பலர் ஆர்வத்துடன் தாங்கள் சமைத்த உணவுகளை வழங்கி, பசியுடன் இருப்பவர்களை மகிழ்வித்தனர்.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...