புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கு - முன்னாள் துணை காவல் ஆணையர் ஆஜர்


கோவையில் கடந்த 2014ம் ஆண்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பணை செய்யப்பட்டதாக, தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மாநகர துணை காவல் ஆணையர் உட்பட, 5 காவல்துறையினர் கோவை குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

கடந்த 2014ம் ஆண்டு கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த மங்கள்ராஜ் என்ற வியாபாரி தனது குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மாயமானதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். 

இதனிடையே இவ்வழக்கில் அப்போது கோவை மாநகர துணை ஆணையராக பணியாற்றிய சுகுமார், உதவி ஆய்வாளர் செல்வராஜ், காவலர்கள் செந்தில்குமார், ஜான், கதிரேசன் ஆகிய 5 காவல்துறையினருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறியதை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இதை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய 17 பேர் மீதும் சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதன் பேரில் 17 பேரையும் ஆஜராகுமாறு கோவை குற்றவியல் முதன்மை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 காவல்துறையினர் உட்பட 17 பேர் இன்று நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் ஆஜராகினர்.

இதையடுத்து வழக்கை வருகிற நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்த சுகுமார் தற்போது பழனி சிறப்பு காவல்படை பட்டாலியன் கமான்டண்ட் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் 5 போலீசார் ஆஜரானதை அடுத்து நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...