வாகனங்களை நிறுத்த தனியார் ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் - ஓட்டுநர்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால் அங்குள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் நிறுத்த ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்ட வால்பாறை பகுதிகள் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. குறிப்பாக விடுமுறை காலங்களில் வழக்கத்தை விட அதிகமான அளவு பயணிகள் வரவு அதிகரிக்கும். பொதுவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக வால்பாறையில் மொத்தம் 80 ஆட்டோக்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாடகை வாகனங்களை நிறுத்த தனியாக ஸ்டேண்டுகள் இல்லாததால் சாலைகளில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. 

இதனால் பொதுக்கூட்டங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக கூறி சில நேரங்களில் சாலையில் உள்ள ஆட்டோ மற்றும் கார்களை அகற்ற காவல் துறையினர் நிர்பந்தம் செய்வதால் இவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்க கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வாகனங்களை நிறுத்த தனியார் ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக நகராட்சியின் முக்கிய பகுதியான பேருந்து நிலையங்களுக்கு அருகே அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுவாக வால்பாறையை சுற்றுலா பகுதியாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து வருவதும் வாடகை வாகன ஓட்டிகளுக்கு பின்னடைவாக தான் பார்க்க முடிகிறது.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...