காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது - தமிழிசை சௌந்தரராஜன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  பேசியதாவது:-

''காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்வை ஏற்படுத்தாது. அரசியல் காரணங்களுக்காக காலதாமதமாக நடத்தப்படும் இந்த அவசியமற்ற கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது. 

3 தொகுதி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழக மக்களின் ஆதரவு உள்ளதாகக் காட்டிக் கொள்ளும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் ஏன் தேர்தல் களத்தில் இறங்க பயப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், நடுநிலையுடனும் தேர்தலை நடத்த வேண்டும். மக்களின் ஆதரவுடன் மாற்று சக்தியாக பாஜகவை அடையாளப்படுத்தும் வகையில் பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் 3 பேர் பட்டியலை பாஜக மத்திய தலைமைக்கு அனுப்பி உள்ளது. மத்திய தலைமையின் ஒப்புதலுக்கு பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

மேலும், பணப்பட்டுவாடா செய்த புகாரில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதிகளில் மீண்டும் அதே வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பது ஜனநாயகத்தை திராவிட கட்சிகள் மதிப்பதில்லை என்பதை காட்டுவதாக உள்ளது. தலாக் முறை பெண்ணுரிமைக்கு எதிரானது, இம்முறைக்கு இஸ்லாமிய பெண்களே எதிராக உள்ளனர். மதம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை பாஜக ஏற்படுத்த முயல்கிறது என்பது தவறானது. 

தமிழக முதல்வர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொறுப்பற்ற நிலையில் பேசி வருவது ஆரோக்கியமான நடைமுறை இல்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்திப்பு நாகரிக அரசியலின் வெளிப்பாடு. அதில் கருத்து சொல்லவோ, விமர்சனம் செய்யவோ எதுவும் இல்லை. 

சிப்பெட் தமிழகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்படாது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தை ஆளும் கட்சிகள் தகுதியான இடத்தை தேர்வு செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் நிச்சயம் அமைக்கப்படும். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தேறி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இலங்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பின்புலத்தை ஆராய்ந்து, இதுபோன்ற செயல்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்பட வேண்டும்'' என தமிழிசைசௌந்தரராஜன்   தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...