காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது - தமிழிசை சௌந்தரராஜன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  பேசியதாவது:-

''காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்வை ஏற்படுத்தாது. அரசியல் காரணங்களுக்காக காலதாமதமாக நடத்தப்படும் இந்த அவசியமற்ற கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது. 

3 தொகுதி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழக மக்களின் ஆதரவு உள்ளதாகக் காட்டிக் கொள்ளும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் ஏன் தேர்தல் களத்தில் இறங்க பயப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், நடுநிலையுடனும் தேர்தலை நடத்த வேண்டும். மக்களின் ஆதரவுடன் மாற்று சக்தியாக பாஜகவை அடையாளப்படுத்தும் வகையில் பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் 3 பேர் பட்டியலை பாஜக மத்திய தலைமைக்கு அனுப்பி உள்ளது. மத்திய தலைமையின் ஒப்புதலுக்கு பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

மேலும், பணப்பட்டுவாடா செய்த புகாரில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதிகளில் மீண்டும் அதே வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பது ஜனநாயகத்தை திராவிட கட்சிகள் மதிப்பதில்லை என்பதை காட்டுவதாக உள்ளது. தலாக் முறை பெண்ணுரிமைக்கு எதிரானது, இம்முறைக்கு இஸ்லாமிய பெண்களே எதிராக உள்ளனர். மதம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை பாஜக ஏற்படுத்த முயல்கிறது என்பது தவறானது. 

தமிழக முதல்வர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொறுப்பற்ற நிலையில் பேசி வருவது ஆரோக்கியமான நடைமுறை இல்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்திப்பு நாகரிக அரசியலின் வெளிப்பாடு. அதில் கருத்து சொல்லவோ, விமர்சனம் செய்யவோ எதுவும் இல்லை. 

சிப்பெட் தமிழகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்படாது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தை ஆளும் கட்சிகள் தகுதியான இடத்தை தேர்வு செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் நிச்சயம் அமைக்கப்படும். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தேறி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இலங்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பின்புலத்தை ஆராய்ந்து, இதுபோன்ற செயல்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்பட வேண்டும்'' என தமிழிசைசௌந்தரராஜன்   தெரிவித்தார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...