பெண்ணிடம் நகை பறிப்பு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி மோகனாம்பாள் (36). இவர் சனிக்கிழமையன்று காலை கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். தனபால் லே அவுட் அருகே நடந்து வந்துகொண்டிருந்த போது தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மோகனாம்பாளின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த மோகனாம்பாள் கூச்சலிடவே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சில நொடிகளில் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதுகுறித்து, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...