அழிந்துவரும் நாரைகள்- பாதுகாக்க முன்வருவோம்

அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடித்துள்ள பறவை இனங்களில் ஒன்று தான் ''ஃபிளமிங்கோ'' என்னும் பறவை. தமிழில் நாரை, பூநாரை என்றழைக்கப்படும் இந்த பறவைகள் உலகில் மொத்தம் இரண்டு வகைகளிலேயே காணப்படுகிறது. மற்ற பறவை இனங்களில் இருந்து இதனை எழிதாக இனம்காண முடியும்.

பெரிய ஃபிளமிங்கோ மற்றும் சிறிய ஃபிளமிங்கோ என்ற இந்த பறவைகள் பெரும்பாலும் நீர் நிலைகள், சதுப்புக் காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. பெரிய நீர்நிலைகளில் உள்ள சிறிய வகை மீன் மற்றும் தண்ணீரில் உள்ள சில பூச்சி வகைகளை அது உணவாக உட்கொள்ளும்.

இந்த வகை பறவைகள் அதிகப்படியாக நீர்நிலையில் இருப்பதால் இது இளஞ்சிவப்பு நிறங்களில் இருப்பது சிறப்பாகும். பெரிய வகை பிளமிங்கோஸ் குளிர் காலத்தில் கடலோர சதுப்புநிலங்களுக்கு கூட்டமாக இடம்பெயர்கின்றன. சிறிய ஃபிளமிங்கோ பறவைகள் குறைந்த எண்ணிக்கையில் நம் சுற்றுப்புரத்திலேயே அதிகப்படியாக காணப்படுகிறது.

1940 ஆம் ஆண்டு கட்ச் டாக்டர் சலீம் அலி என்பவர் பெரிய ஃபிளமிங்கோ வகையினை கண்டறிந்தார். அதற்கு முன்பு, பிளமிங்கோஸ் ஆப்பிரிக்காவில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து வந்தன. 

தற்போது கோவை போன்ற பெரிய மாவட்டங்களிலும் இந்த வகை பறவைகள் காணப்படுகின்றன. கோவையில் உள்ள சில ஈரநிலங்களில் அது இரைதேடி வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் பிளமிங்கோஸ் பறவைகள் சுற்றிவந்துள்ளன.

தற்போது, மீண்டும் அந்த வகைப் பறவைகள் சிங்காநல்லூர் ஏரியில் இரைக்காக வந்துள்ளன. அப்பகுதியை கடந்து சென்ற சிலர் அதனைக் கண்டுள்ளனர். மீண்டும் அதனைக்காண சென்ற போது அப்பறவைகள் அங்கிருந்து மாயமாகியுள்ளன.

அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் உள்ள பிளமிங்கோஸ் போன்ற பறவைகளை பாதுகாப்பது நம் கடமையாகும். இரைதேடி வரும் அதற்கு எவ்வித இடையூறு செய்யாமலும், நீரினை மாசுபடுத்தாமலும் அதனை நாம் பாதுகாப்போம்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...