அதிகரிக்கும் கஞ்சா விற்பனை- இருவர் கைது


கோவையில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில், காவல் துறையினரும் பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, புலியகுளம் அடுத்த ரெட் ஃபீல்ட்ஸ் சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இராமநாதபுர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், அப்பகுதிக்கு விரைந்த துணை காவல் ஆய்வாளர் அன்பரசன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த வாலிபர்கள் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோனி (27) மற்றும் மனோஜ்குமார் (24) என்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...