ஐந்து மண்டலங்களிலுள்ள ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களிலுள்ள மாநகராட்சி ‘பொது ஒதுக்கீட்டு இடங்கள்’ (ரிசர்வ் சைட்) கண்டறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக நகரமைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை செய்து ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சிறப்பு தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையியில்:- “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அலுவலருடன் ஆலோசனைகள் செய்து ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், கிழக்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 13 லட்சத்து 78 ஆயிரத்து 552.20 சதுரமீட்டர் அளவிலுள்ள 293 பொது ஒதுக்கீட்டு இடங்களும், மேற்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 10 லட்சத்து 29 ஆயிரத்து 952.275 சதுரமீட்டர் அளவிலுள்ள 439 பொது ஒதுக்கீட்டு இடங்களும், வடக்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 6 லட்சத்து 3 ஆயிரத்து 645.57 சதுரமீட்டர் அளவிலுள்ள 506 பொது ஒதுக்கீட்டு இடங்களும், தெற்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 6லட்சத்து 60 ஆயிரத்து 812.51 சதுரமீட்டர் அளவிலுள்ள 111 பொது ஒதுக்கீட்டு இடங்களும், மத்திய மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரத்து 373.86 சதுரமீட்டர் அளவிலுள்ள 60 பொது ஒதுக்கீட்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது அலுவலர்களுடன் ஆலோசனை செய்து துரிதமான முறையில் விரைவில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்கள் (ரிசர்வ் சைட்) பற்றி பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஏதுவாக கோயம்புத்தூர் மாநகராட்சி இணைய தளமான (www.ccmc.gov.in) என்ற முகவரியில் உள்ள (Reserved site details) என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு  மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...