கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்ட சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார். வாக்குப்பதிவு 68 சதவீதத்திலிருந்து 85 sadhaveedham ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Coimbatore: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மக்கள் பங்கேற்பை அதிகரிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், சமூக அமைப்புகள், NGOக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நேற்று கோவை IMA ஹாலில் நடைபெற்ற சிறப்பு பாராட்டு விழாவில் இந்த கௌரவங்கள் வழங்கப்பட்டன.






100 சதவீதம் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தை சிறப்பாக ஒருங்கிணைத்து, வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்குப்பதிவின் அவசியத்தை எடுத்துரைத்த பல சமூக அமைப்பு பிரதிநிதிகள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் Abdul Hakkim (செயலாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் & குணியமுத்தூர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர்), Nisar (செயலாளர், சுப்புலட்சுமி நகர் சங்கம்), Robin (ECM, குணியமுத்தூர் நகர் சங்கம்), Ansari (சாலிடாரிட்டி இளைஞர் அணி), மற்றும் Mohammed Al Faheem (SIO) ஆகியோர் அடங்குவர்.






கடந்த தேர்தலில் கோவை மாவட்ட வாக்குப்பதிவு சுமார் 68 சதவீதம் இருந்த நிலையில், இந்த தேர்தலில் அது 85 சதவீதம் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிடத்தக்க உயர்விற்கு வீடு வீடாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள், வாக்காளர் பேரணிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சிகள் முக்கிய காரணமாக இருந்ததாக அனைவரும் பெருமையுடன் தெரிவித்தனர்.






பல சமூக அமைப்புகள், அரசு ஊழியர்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் Pavan Kumar Giriyappanar அனைவரின் அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை பாராட்டினார். ஜனநாயக செயல்முறையில் குடியிருப்போர் சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் காட்டிய கூட்டு உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாக இந்த சாதனை காணப்பட்டது.






நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று, தேர்தல் விழிப்புணர்விற்காக உழைத்த அனைவருக்கும் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. குடியிருப்போர் பகுதிகள் முழுவதும் ஜனநாயக செயல்முறையில் குடிமக்களை தீவிரமாக பங்கேற்க ஊக்குவித்ததற்காகவும், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்ப உதவியதற்காகவும் இந்த அமைப்புகள் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டன.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...