சிறந்த கல்வியாளர்களுக்கு விருது வழங்கிய டைம்ஸ் ஆப் இந்தியா


தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகை தமிழக அளவில் கல்விச் சேவையில் சிறப்பாக செயலாற்றும் கல்வி நிறுவன அறங்காவலர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கண்டறிந்து அவர்களின் சிறந்த சேவைக்காக கல்வியாளர் விருதினை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வழங்கியது. 



இதில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி சிறந்த கல்வியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த கல்வியாளர் எடுய்கான் விருது வழங்கப்பட்டுள்ளது. 



இவர் கோவையில் குனியமுத்தூரில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவைப்புதூரில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை நடத்தி வருகிறார். இந்நிறுவனங்களில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். 

இந்நிறுவனங்களை சிறப்பாக வழிநடத்தி வருவதற்காகவும், சிறப்பான கல்விச் சேவைக்காகவும், சிறந்த தலைமைப் பண்பு, நிறுவனங்களை வழிநடத்தும் முறை, கல்விச் சேவையில் மாற்றம் ஏற்படுத்திய செயல்களுக்காக பாராட்டி இவ்விருதினை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழிக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.



இந்நிகழ்வின் போது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் சென்னை பதிப்பகத்தின் துணைத் தலைவர் மற்றும் பொறுப்புக் குழுத் தலைவர் ஆனந்த் மூர்த்தி, தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் தலைவர் மெய்-கிவைய் பார்க்கர் மற்றும் நாக் குழுவின் ஆலோசகர் ஷியாம் சுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...