திண்டுக்கல்லில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை

திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் பாரதிபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பி.மணிமாறன் என்ற வாட்டார் மணி (38). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்து மக்கள் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர், இந்து முன்னணி அமைப்பில் இணைந்து மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மண்டலத் தலைவர் தர்மாவுடன், மணிமாறனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதிபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகம் அருகே திங்கள்கிழமை இரவு மணிமாறன் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

அப்போது, இந்து மக்கள் கட்சி நிர்வாகி தர்மா உள்ளிட்ட சிலர், மணிமாறனுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கத்தியால் குத்தப்பட்ட மணிமாறன், அண்ணாநகரில் உள்ள தனது வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அவரை விடாமல் துரத்தி வந்த 2 நபர்கள், மணிமாறனின் வீட்டு வாசலில் அவரை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். அப்போது, மணிமாறனைக் காப்பாற்ற முயன்ற அவரது மனைவி பிரியாவுக்கும் காயம் ஏற்பட்டது. 

பின்னர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிமாறன் உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...