ஒபாமா மனைவிக்கு அமைச்சர் பதவி: சொல்கிறார் ஹிலாரி கிளிண்டன்

வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், தற்போதைய அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவுக்கு, அமைச்சர் பதவி வழங்க தயாராக இருக்கிறேன்,'' என, அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர் 8ல் நடைபெறவுள்ளது; இதில், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, 68, போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப், 70, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இருவரும், இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிலாரி கிளிண்டனின் பிரசார கூட்டங்களில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் பங்கேற்று, ஆதரவு திரட்டி வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற பிரசாரத்தில், மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதையடுத்து, மிச்சேலுக்கு அமைச்சர் பதவி அளிக்க, ஹிலாரி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹிலாரி கூறியதாவது: ஒபாமா, அதிபராக பதவி வகித்துள்ள எட்டு ஆண்டுகளில், அவரது மனைவி மிச்சேலின் பணிகள் முக்கியமானவை; அரசு நிர்வாகத்தில் ஒபாமாவுக்கு உதவியாக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி, பெண் கல்வி உள்ளிட்டவற்றில் மிச்சேல் ஆர்வமுடையவர். அதிபராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டால், மிச்சேலுக்கு அமைச்சர் பதவி வழங்க தயாராக உள்ளேன்; அவர் தயாராக இருந்தால் முக்கிய அரசு பொறுப்புகளை ஏற்று பணியாற்றலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பதிலுக்கு பதில் பதவி:

அமெரிக்க அதிபராக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பில் கிளிண்டன் பதவி வகித்த போது, அவரது மனைவியான ஹிலாரி, அரசு பணிகளில் ஆர்வம் காட்டினார். இதையடுத்து, அதே ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமா, முதன்முறை அதிபரானவுடன், வெளியுறவு அமைச்சர் பதவியை ஹிலாரிக்கு வழங்கினார். ஜனநாயக கட்சியின் தற்போதைய வேட்பாளர் ஹிலாரி, ஒபாமாவின் மனைவி மிச்சேலுக்கு அமைச்சர் பதவி வழங்க முன் வந்துள்ளார்.

டிரம்ப் முன்னிலை:

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக, 'ஏ.பி.சி., நியூஸ்' நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், டிரம்ப்புக்கு, 46 சதவீதம் பேரும், ஹிலாரிக்கு, 45 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில், முதன்முறையாக, ஹிலாரியை விட, டிரம்ப் கூடுதலாக, ௧ சதவீத ஆதரவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...