காஷ்மீர் பள்ளிகளை மூடச் சொல்லி மிரட்டும் பாக்., படைகள்

ஜம்மு: காஷ்மீரின் எல்லையோரப் பகுதியில் உள்ள பள்ளிகளை மூடுமாறு பாக்., படைகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றன.

பள்ளிகள் மூடல்:

எல்லையில் பாக்., படைகள் உடனான பயங்கர துப்பாக்கிச் சண்டை காரணமாக காஷ்மீரின் எல்லையோரத்தில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. ஜம்முவில் உள்ள 174 பள்ளிகள் மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள 45 பள்ளிகளையும் மறுஉத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர் மிரட்டல்:

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீரில் நிலவிய பதற்ற நிலை காரணமாக அனைத்து கல்விநிறுவனங்களையும் மூட வேண்டும் என பிரிவினைவாதிகள் உத்தரவிட்டனர். இதன் காரணமாக கடந்த 4 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளை மூடுமாறு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக இதுவரை 12 பேரை கைது செய்துள்ளோம். மேலும் 23 பேரை தேடி வருகிறோம். இந்நிலையில் தற்போது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வரும் பாக்., படைகளும் மிரட்டல் விடுத்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

மூடியே இருக்கட்டும்:

எல்லையில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அக்டோபர் 3ம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து பாக்., படைகள் எல்லையில் தாக்குதல் நடத்தி வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, மறுஉத்தரவு வரும் வரை சர்வதேச எல்லை மற்றும் ஜம்முவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பள்ளிகளை மூட நவம்பர் 1 ம் தேதி முதல் உத்தரவிட்டுள்ளதாக ஜம்மு துணை கமிஷனர் சிம்ரன் தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...