காஷ்மீர் பள்ளிகளை மூடச் சொல்லி மிரட்டும் பாக்., படைகள்

ஜம்மு: காஷ்மீரின் எல்லையோரப் பகுதியில் உள்ள பள்ளிகளை மூடுமாறு பாக்., படைகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றன.

பள்ளிகள் மூடல்:

எல்லையில் பாக்., படைகள் உடனான பயங்கர துப்பாக்கிச் சண்டை காரணமாக காஷ்மீரின் எல்லையோரத்தில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. ஜம்முவில் உள்ள 174 பள்ளிகள் மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள 45 பள்ளிகளையும் மறுஉத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர் மிரட்டல்:

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீரில் நிலவிய பதற்ற நிலை காரணமாக அனைத்து கல்விநிறுவனங்களையும் மூட வேண்டும் என பிரிவினைவாதிகள் உத்தரவிட்டனர். இதன் காரணமாக கடந்த 4 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளை மூடுமாறு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக இதுவரை 12 பேரை கைது செய்துள்ளோம். மேலும் 23 பேரை தேடி வருகிறோம். இந்நிலையில் தற்போது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வரும் பாக்., படைகளும் மிரட்டல் விடுத்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

மூடியே இருக்கட்டும்:

எல்லையில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அக்டோபர் 3ம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து பாக்., படைகள் எல்லையில் தாக்குதல் நடத்தி வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, மறுஉத்தரவு வரும் வரை சர்வதேச எல்லை மற்றும் ஜம்முவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பள்ளிகளை மூட நவம்பர் 1 ம் தேதி முதல் உத்தரவிட்டுள்ளதாக ஜம்மு துணை கமிஷனர் சிம்ரன் தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...