மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இன்று இடிப்பு: 10 விநாடிகளில் தரைமட்டமாக்க ஏற்பாடு

சென்னை: பாதுகாப்பற்றது என்று அறிவிக்கப்பட்ட சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இன்று திட்டமிட்டபடி இடிக்கப்பட இருக்கிறது. வெடி மருந்துகளை பயன்படுத்தி கட்டிடத்தின் இடிபாடுகள், கட்டிட சுற்றுவட்டாரத்திற்குள்ளேயே விழும் வகையில் இடிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் 11 மாடி கட்டிடம் இடிக்கும் பணி இன்று திட்டமிட்டப்படி நடக்கும் என்று நேற்று கட்டிடத்தை இடிக்கும் நிர்வாக இயக்குநர் பொன்னுலிங்கம் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 8 மணி அளவில் அந்த கட்டிடத்தை இடிப்பதற்கான தேவையான வெடி மருந்துகளை பொருத்தும் பணி தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். சுமார் 8 மணிக்கு தொடங்கும் பணி மதியம் 2, 3 மணிக்கு நிறைவடைந்துவிடும் என்றும், அந்த பணி நிறைவடைந்ததும் 10 விநாடிகளில் கட்டிடம் தரைமட்டம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டிடத்தை இடிக்கும் பணிக்கு மழை போன்ற இயற்கை பேரிடர்கள் எந்த விதத்திலும் தடங்களாக இருக்காது. மின்னல், இடி போன்றவை வந்தால் மட்டுமே, இக்கட்டிடத்தை இடிக்கும் பணி தள்ளிப்போகுமே தவிர, மற்ற எந்த வகையிலும் இந்த கட்டிடம் இடிப்பு பணி தள்ளிப்போகாது என்றும் தெரிவித்திருந்தார்கள். இதனையடுத்து தற்போது இதற்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் பரப்பளவுக்குள் யாரும் இருக்கக்கூடாது என்று நேற்றே தெரிவித்துவிட்டது. அதன்படி கட்டிடத்தை சுற்றியுள்ள சுமார் 120 வீடுகளில் வசிப்பவர்கள் யாரும் இருக்க வேண்டாம்.

அருகில் மதநந்தபுரம் என்ற இடத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இன்று மதியம் 12 மணிக்கு கட்டிடத்தை சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் யாரும் இருக்க வேண்டாம். அவர்கள் மண்டபத்திலோ அல்லது உறவினர்கள் வீட்டிலோ தங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள், மற்றும் சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் கட்டிடத்தை சுற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இன்று காலை 10 மணி முதல் அப்பகுதியில் மின்சாரம் இருக்காது மற்றும் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது போரூர் - குன்றத்தூர் சாலையில் பிற்பகல் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிரங்க்சாலை வழியாக குன்றத்தூர் செல்லும் வாகனங்கள் மணப்பாக்கம் சாலையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆற்காடு வழியாக செல்லும் வாகனங்கள் குமண்ன்சாவடி வழியாக குன்றத்தூர் செல்ல வேண்டும். குன்றத்தூரில் இருந்து வரும் வாகனங்களும் இதே வழியை பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...