கிணற்றில் விழுந்து 3 பேர் பலி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலசாமி. இவரது மனைவி பாலமணி (57). செவ்வாயன்று சமத்தூர் பகுதியில் உள்ள ஜோதிமுத்து தோட்டத்தில் ஆடுகளுக்கு உணவு சேகரிப்பதற்காக பாலமணி சென்றுள்ளார். இவருடன், பாக்கியம் (50), மல்லிகா (45) ஆகியோரும் சென்றுள்ளனர். அங்கு ஒரு மரத்தில் இலை பறித்துக்கொண்டிருந்த போது அருகில் இருந்த 50 அடி ஆழக் கிணற்றில் பாலமணி தவறிவிழுந்துள்ளார். இவரைக் காப்பாற்ற பாக்கியமும், மல்லிகாவும் கிணற்றில் குதித்துள்ளனர். 

இந்நிலையில், மூவரும் நீரில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற சிலர் கிணற்றில் இருவரின் உடல் மிதப்பதைக் கண்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மிதந்துகொண்டிருந்த பாலமணி மற்றும் பாக்கியத்தின் உடலை மீட்டனர். கிணற்றின் அடியில் சிக்கியிருந்த மல்லிகாவில் உடல் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.

உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து கோட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...