கல்லூரி மாணவன் அறையில் கணினித் திருட்டு- 4 பேர் கைது


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்சந்திரபாபு. இவரது மகன் சந்திரதாஸ் (22). கோவை மாவட்டம் சூலூரிலுள்ள சப்தகிரி நகர் பகுதியில் அறையெடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருகிறார். இவருடன் அறையில் மொத்தம் 3 பேர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதனன்று சந்திரதாஸ் உள்ளிட்ட அனைவரும் வெளியில் சென்றுவிட்டு அறைக்கு திரும்பியுள்ளனர். அப்போது அறையில் 4 பேர் கொண்ட கும்பல் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்களைப் பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சூலூர் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் (21), ஜெயசுந்தர் (21), பரதன், சுபாஷ் என்பதும், அதேக்கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள், நான்குபேரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...