எஸ்என்ஆர் கல்லூரியில் சென்னையின் எஃப்சி வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பைவலைவ் அறிமுகம் எஸ்என்ஆர் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கால்பந்து விளையாட்டு சென்னையின் எஃப்சி வீரர்கள் கலந்து கொண்டனர்.எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி மற்றும் சென்னை ஆன்லீஷ் விளையாட்டு எல்எல்பி நிறுவனம் இணைந்து 8,000 சதுர அடி இடத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதி அமைக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சுமார் ஒரு கோடி செலவில் எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் இந்த புல்தரை கால்பந்து வசதி "பைவலைவ்" முத்திரையுடன் சர்வதேச தரத்தில் பிப்ரவரி 2017ல் அமைய உள்ளது. வழக்கமான போட்டிகள் முகாம்கள் நடத்த பள்ளிகள், கல்லூரிகள், பெருநிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



பின்னர் நிகழ்ச்சியில், சென்னையின் எஃப்சி வீரர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கால்பந்து வீரர்களான ஜெஜெ  (இந்தியாவின் சிறந்த வீரர்) காங்கெபாம் தொய் சிங் (தற்காலிக பெங்களூரு எஃப்சி வீரர் - சென்னையின் எஃப்சி வீரர் இந்திய சூப்பர் லீக் மிட்ஃபீல்டராக இருக்கும் கால்பந்து வீரர்) ஈடர் மோன்டெய்ரா பெர்னாண்டஸ், ஏதேர் என அழைக்கப்படும், சென்னையின் எஃப்சி வீரர் பிரேசிலிய கால்பந்து வீரர்) மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்களில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி சுந்தர், தலைமை வர்த்தக அதிகாரி ஸ்வாதி ரோஹித், முதன்மை செயல் அதிகாரி சி வி ராம்குமார், எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன், கோவை கால்பந்து கழக செயலாளர் ராஜா, நிறுவனங்களின் தலைவர்கள், கல்வியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...