குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிகளுக்கான "சாரதா மையம்" திறப்பு விழா!

கோவை: சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிகளுக்கான "சாரதா மையம்" திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில், மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மையத்தினை திறந்து வைத்தார். குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவிற்கு தலைமை ஏற்றார். 



இராமகிருஷ்ண பரமஹன்சரின் துணைவியாரும், பெண்களுக்கு முன்மாதிரியுமான அன்னை ஸ்ரீ சாராத தேவி அவர்களுக்கு இந்த மையம் அர்பணிக்கப்படுகின்றது. சாராத மையம் ஐம்பது ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இம்மையம் உள்விளையாட்டுக்கான வசதிகள், தொலைக்காட்சிகள், கணினி மையம், வாசிப்பு அறைகள் என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில், சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கு கூடமும், நாள் ஒன்றுக்கு நான்கு ஆயிரம் பேருக்கு சமைப்பதற்கான அதி நவீன வசதிகள் கொண்ட சமையல் கூடம் போன்றவை உள்ளது. 



இந்த திறப்பு விழாவில், கல்லூரியின் நிருபர் பாலசுப்ரமணியம், துணை நிருபர் சங்கர் வாணவராயர், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...