நொய்யல் நதியின் முன்னாள் தோற்றத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச்சென்ற பக்தி நிகேதன் நாட்டிய அமைப்பினர்


கொங்கு மண்டலத்தின் நீராதாரமாகவும், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விலங்குகளின் வாழ்வாதாரமாகவும் திகழ்ந்தது நொய்யல் நதி பல்வேறு விதமான உயிரினங்களின் நீர்த்தேவையினை ஒரு காலத்தில் நொய்யல் பூர்த்தி செய்து வந்தது. ஆனால், மனிதர்களின் வளர்ச்சி மற்றும் சரியான பராமறிப்பின்மையால் நொய்யல் நதி தற்போது வழித்தடமாக மாறியுள்ளது. இதனை மீண்டும் மீட்டெடுத்து நொய்யல் நதியை செழிப்படையச் செய்ய வேண்டும் என பல தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பக்தி நாட்டிய நிகேதன் என்னும் நாடக அமைப்பின் சார்பில் நொய்யல் நதி குறித்தான ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கருணசாகரி ஏற்பாடு செய்திருந்தார். 



இந்த நாடக நிகழ்வின் போது அந்த அமைப்பின் நடனக் குழுவினர் நொய்யலின் கடந்தகாலத் தோற்றத்தினை அப்படியே நடனமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

ஆறுகள் தான் தண்ணீரின் அடிப்படை ஆதாரமாக உள்ளது. ஆனால், மக்கள் வசிக்கும் பகுதியில் குழாய்களில் நீர் வருவதினால் மக்களுக்கு நதிகள் அழிந்துவருவது குறித்து சிறிதும் கவலையில்லை. அதுவும் ஒருகட்டத்தில் வற்றிவிடும். அப்போது, நீரின் ஆதாரமான ஆறுகள் குறித்து நாம் கவலையடைவோம்.

பல்வேறு ஆண்டுகலாக கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் நொய்யலால் பயனடைந்து வந்தன. நாம் அதனை அழித்ததன் தொடர்ச்சி அதனால் பயனடைந்து வந்த விவசாயம் மாய்ந்துபோனது. அதனை நம்பி இருந்த பல உயிரினங்கள் இடம்பெயர்ந்தன.

அழிவின் பாதையில் இருந்து இயற்கையையும், நம்மையும் பாதுகாக்க நொய்யலை மீட்டெடுப்பது அவசியம் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு பக்தி நாட்டிய நிகேதன் அமைப்பினர் நடனம் நிகழ்த்தினர். நடனக் கலைஞர்களின் சிறப்பான நடனம் பார்வையாளர்களை நொய்யலின் முந்தைய காலத்திற்கே அழைத்துச் சென்றதாக அமைந்தது. கலைஞர்கள் தங்கள் நடனத்திறன் மூலம் நொய்யலை திரும்பப் பெறுவது, அதை நாம் இன்னும் பொறுப்புடனும், சூழலியல் நட்புடனும் பாதுகாப்பது என்று வலியுறுத்தினர்.





























Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...